districts

img

ஓஎன்ஜிசி ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மறியல்

திருவாரூர், ஜூன் 3-

    திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் (கருப்பூர் பகுதியில் அமைந்துள்ள ஓஎன்ஜிசி  எண்ணெய் கிணறு சுமார் 30 ஆண்டு களுக்கு மேலாக ஒப்பந்த ஊழியராக பணி யாற்றி வரும் ஓஎன்ஜிசி ஊழியர்களை பணி யாளர்களை நிரந்தரம் செய்யக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.

   போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செய லாளர் முருகையன், இரா.மாலதி, ஓஎன்ஜிசி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. வேல்ரத்னம், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் கே.கஜேந்திரன், வேதமூர்த்தி, மாசிலாமணி, ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   ஆர்ப்பாட்டத்தில், ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். கிராஜுவெட்டி வழங்க வேண்டும். எலக்ட்ரிஷன், மெக்கானிக்கல், ஓட்டுநர், கேண்டீன் ஊழியர்கள் பணி பாது காப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத் தப்பட்டன.