districts

பொன்னமராவதியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

பொன்னமராவதி, ஜூலை 30-

      புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார். அவரது உடல் மின்மாற்றியில் தொங்கியதால் அப்  பகுதியில் பரபரப்பு நிலவியது. புதுக் கோட்டை விவசாயி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள  மனப்பட்டியை சேர்ந்தவர் முருகன் ( 78),  விவசாயி. இவருக்கு திருமணமாகி மூன்று  மகன்களும், இரண்டு மகள்களும் உள்ள னர். இந்தநிலையில் முருகன் அவரது  தோட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டதால் அதனை சரி செய்வதற்காக பொன்னமராவதி-மனப்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்மாற்றியில் முருகன் ஏறியுள்ளார்.

    அப்போது மின் இணைப்பைத் துண்  டிக்காமல் பீஸ் கட்டையை மாற்ற முயன்ற தால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே முருகன் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது உடல் மின்மாற்றியில் தொங்கி கொண்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் பொன்னமரா வதி மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்  பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு முரு கனின் உடல் கீழே இறக்கப்பட்டது. அதன்  பின்னர் அவரது உடலை காவல்துறையினர் உடற்கூராய்விற்காக பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   இந்த நிலையில் பொன்னமராவதி உப  கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  மின்மாற்றிகளில் பொதுமக்கள் தாங்களா கவே பீஸ் போடுதல் மற்றும் பழுதுகள் சரி  செய்வதை தவிர்க்க வேண்டும் என உதவி  செயற்பொறியாளர் முத்துசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

     இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  

    ‘பொன்னமராவதி உபகோட்டத்திற்கு உட்பட்ட நகர், பொன்னமராவதி கிராமி யம், குழிபிறை மற்றும் காரையூர் பிரிவு  அலுவலக பகுதிகளில் உள்ள மின்மாற்றி களில் பழுது மற்றும் பியூஸ் கட்டாகி மின் தடை ஏற்படும்பொழுது அப்பகுதிகளில் உள்ள மக்கள் தாங்களாகவே மின்மாற்றி களில் ஏறி பழுதை சரிசெய்ய முயற்சிக்கி றார்கள். அவ்வாறு முயற்சிக்கும் பொழுது  பொதுமக்களுக்கு மின்விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டுவிடுகிறது. இப்பகுதி களில் உள்ள மின்மாற்றிகளில் ஏதேனும்  பழுதுகள் ஏற்பட்டாலோ பியூஸ் கட்டாகி  மின்தடை ஏற்பட்டாலோ கீழ்க்கண்ட பிரிவு  அலுவலக உதவி மின் பொறியாளர் களுக்கு அலைபேசி எண்ணில் தகவல் தெரி விக்கலாம்.

     உதவி மின் பொறியாளர்- பொன்ன மராவதி நகர்- - 9445854292, உதவி மின் பொறி யாளர் - பொன்னமராவதி கிராமியம் -94450 72422, உதவி மின் பொறியாளர்- குழிபிறை- 9445854293, உதவி மின் பொறியாளர்- காரையூர்- -9445854294.

    மேலும் மழைக்காலங்களில் மின்கம்பி கள் அறுந்து கீழே கிடந்தால் அதைத்  தொடவேண்டாம். மின்கம்ப இழுவைக் கம்பிகளில் கால்நடைகளைக் கட்ட வேண்டாம். மின்கம்பங்களில் துணிகளை உலர்த்த வேண்டாம். குழந்தைகளை மின்  கம்பங்களுக்கு அருகே விளையாட அனு மதிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.