districts

img

திருஆரூரான் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

பாபநாசம், ஜன.28 - திருஆரூரான் சர்க்கரை  ஆலை முன்பு அரைத்த  கரும்பிற்கு விவசாயி களுக்கு தர வேண்டிய ரூ.160 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும். வங்கி யில் உழவர்கள் பெயரில் ரூ. 500 கோடி கடன் பெற்ற ஆலை  நிர்வாகம், வங்கி அலுவ லர்கள் மீது சிபிஐ விசா ரணை நடத்த வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட காவிரி விவ சாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் வியாழனன்று நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு உதயகுமார் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் நாமம் வரைந்த அட்டையை கை யில் ஏந்தியும், கரும்பை கையில் ஏந்தியும் கோரிக் கைகளை முழங்கினர்.