districts

சாதிவெறியோடு தாக்குதல் தொடுத்த நபர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 13-

    புதுக்கோட்டை அருகே சாதியைச் சொல்லி இழி வாகப் பேசியதோடு கொலை வெறித் தாக்குதலும் நடத்திய நபர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நட வடிக்கை கோரி புதுக்கோட்  டையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

     புதுக்கோட்டையை அடுத்த சொக்கநாதபட்டி யைச் சேர்ந்தவர் தங்கமணி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்  தவர். அதே ஊரைச் சேர்ந்த  ஜெயபால் மகன் சுதாகர்  தங்கமணியை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி யதோடு, கொலைவெறித் தாக்குதலும் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    சுதாகரை வன்கொடு மைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கம்யூ னிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள்  விடுதலை சார்பில் புதுக் கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நா.சந்திர சேகரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கசி.விடு தலைக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், சிபிஐ மாவட்டச்  செயலாளர் த.செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் தே.கலைமுரசு உள்ளிட்டோர் பேசினர்.