பாபநாசம், மே 31-
தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் புகையிலை எதிர்ப்பு தினத்தை யொட்டி சுகாதார நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் தீபக், பண்டார வாடை மருத்துவ அலுவலர் அழகு சிலம்பரசி பங்கேற்று புகையிலையால் வரும் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் குறித்து விளக்கினர்.
பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து, சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.