கரூர், ஆக.20 -
நமது இந்திய முப்படை வீரர் களுக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களின் சார்பில், அன்பும் நன்றியும் தெரிவிக்கும் வித மாக, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ராக்கி கயிறுகள் அனுப்பும் விழா நடை பெறுகிறது.
தற்போது ஏழாவது ஆண்டாக (2023) ராக்கி கயிறுகளை (சகோதரத்துவ கயிறுகளை) தயாரித்து, கரூர் பரணி பார்க் கல்வி குழுமத்திலிருந்து புதுதில்லி ராணுவ தலைமையகத்திற்கு அனுப்பும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கரூர் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் சா.மோகன ரங்கன் தலைமை வகித்தார். செய லர் பத்மாவதி மோகனரெங்கன் வர வேற்று பேசினார். கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார்.
பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிர மணியன் வழிகாட்டுதலின் பேரில், பரணி ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் இணைந்து திருக்குறள் எண். 766ஐ தமிழ், ஆங்கிலம், உருது, சமஸ் கிருதம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, அசாமி, குஜராத்தி, பெங்காளி, சந்தாளி, கொங்கணி, ஒடியா, நேபாளி, சிந்தி உட்பட 18 இந்திய மொழிகளில் மொழி பெயர்த்த 1.60 லட்சம் திருக்குறள் ராக்கி கயிறுகள் மற்றும் பிற ராக்கி கயிறு கள் 50 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரம் ராக்கி கயிறுகளை இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.