districts

திருச்சி முக்கிய செய்திகள்

பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி
கரூர், ஜூன் 25 - கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கன்னியாகுமரி -  காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில்,  திருச்செந்தூரி லிருந்து சேலம் செல்வதற்காக சுற்றுலா பேருந்து ஒன்று  பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை வந்தது. 

இப்பேருந்து மண்மங்கலம் நான்கு ரோடு அருகே வந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டுமானப்  பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், அந்த இடத்தில் இருந்த மண் திட்டு மீது பேருந்து மோதி நின்றது.  இதில் பயணிகள் சிறு காயங்களுடன், மருத்துவமனையில்  முதலுதவி பெற்று, மற்றொரு பேருந்து மூலம் சொந்த ஊர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதி யைச் சேர்ந்த ராஜா ஓட்டி வந்தார். திங்கட்கிழமை காலை 6  மணியளவில் பழுதான பேருந்தில் ஆயில் மாற்றுவதற் காக நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்தை சேர்ந்த நித்யானந்தம் மற்றும் மோகனூரை சேர்ந்த பெரியசாமி ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது அதே சாலையில் பின்னால் வந்த டாரஸ்  லாரி பேருந்து மீது மோதியதில் பேருந்து மீண்டும் மண்  திட்டு மீது ஏறி நின்றது. இதில் வேலை பார்த்துக் கொண்டி ருந்த நித்யானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியசாமிக்கு கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டு சிகிச் சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டார். பேருந்து ஓட்டுநர் ராஜா பேருந்தின் உள்ளே இருந்ததால் உயிர் தப்பினார்.

டாரஸ் லாரியை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திரு நெல்வேலி மாவட்டம், சீயோன் மலையை சேர்ந்த ஜெய பாண்டி சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வாங்கல் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவிரி ஆற்றில் மூழ்கி இருவர் பலி

கரூர், ஜூன் 25- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூண்டி மேல் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (50). இவரது மகன்  கார்த்தி என்ற சிவா (24) கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதி யில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளாஸ்டிக் பை தயா ரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நி லையில் இவரது நண்பர்களான கொடைக்கானல் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர்களான மணிகண்டன் என்ற  சதீஷ் (24), பாலமுருகன் (23) ஆகிய இருவரும் கரூருக்கு  வந்து  வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். பின்னர்  காலையில் எழுந்து நண்பர் கார்த்தி என்ற சிவாவை  பார்த்துவிட்டு, மூவரும் குளிப்பதற்காக தவிட்டுப்பாளை யம் காவிரி ஆற்றுப் பகுதிக்கு  வந்துள்ளனர். 

அப்போது மணிகண்டன் என்ற சதீஷும், பாலமுரு கனும் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த தால், தண்ணீர் 2 பேரையும் இழுத்துச் சென்றது. வேலாயு தம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி, மணிகண்டன் மற்றும் பாலமுரு கனின் உடல்களை மீட்டனர்.

வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெகநாத்,  துணை காவல் ஆய்வாளர் கருணாநிதி மற்றும் போலீ சார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று இருவரின் உடலை யும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு நிதியுதவி

அரியலூர், ஜூன் 25 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத் தில், அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து வரப் பெற்ற  479 கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். முன்னதாக அவர் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில்,  அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்த வெற்றியூர் கிரா மத்தை சேர்ந்த மகாலெட்சுமி, கரையவெட்டி கிராமத்தைச்  சேர்ந்த திவ்யபிரியா, வஞ்சினாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  ரீத்திஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு, முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-க்கான  காசோலையை வழங்கினார்.

பின்னர் கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வம் மற்றும் 4 ஆம் ஆண்டு பயிலும் ஆண்டி மடம் வட்டம், குவாகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ரவீந்திரன் ஆகியோருக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ.50,000-க்கான காசோலையையும் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலை வாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  கங்காதாரிணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பைக் சாகசம் செய்த 3 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 - திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிறுமருதூர் பாலம் அருகே, சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஜூன் 22 அன்று, இளைஞர்கள் 3  பேர் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசங்க ளில் ஈடுபட்டது குறித்த காணொலி சமூக வலைதளங்க ளில் வெளியானது. 

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில், சமயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில், திருச்சி காந்திச்சந்தை பகுதியைச் சேர்ந்த  தேவராஜன், செபாஸ்டியன் டேவிட், புதுக்கோட்டையைச்  சேர்ந்த பரணீதரன் ஆகிய மூவரும் சாகசத்தில் ஈடு பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை  இருவரையும், திங்கள்கிழமை ஒருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களது வாகனங்களையும் பறிமுதல்  செய்தனர். 

பின்னர் பெற்றோரை அழைத்து, அறிவுரை கூறி சொந்த பிணையில் அனுப்பி வைத்தனர். இது போன்ற சாகசங்கள் செய்வோர் குறித்த தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தின் 9487464651 என்ற  வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என தெரி வித்துள்ளனர்.

சிபிஎம் சிறப்பு பேரவை

திருச்சிராப்பள்ளி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை  ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் திங்களன்று மணப்பாறையில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டச்  செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன்,  வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் நஸ்ரின் பானு நன்றி கூறினார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி 
தூய்மைப் பணிகளை ஒப்பந்தத்தில் விட எதிர்ப்பு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) திருச்சி புற நகர் மாவட்டம் லால்குடி நகராட்சி கிளை யின் முதலாமாண்டு பேரவை ஞாயிறன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை கிளை செயலாளர் மகாமணி வாசித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் வாழ்த்துரை ஆற்றினார். உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம் சிறப்புரையாற்றினார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவராக எம்.தினேஷ், செயலா ளராக பி. மகாமணி, பொருளாளராக எஸ்.செல்வகுமார், துணைத் தலைவர்களாக ராஜாத்தி, கொளஞ்சி. அருள்நாதன், ஆறு முகம், அஞ்சலை, கருப்பையா, துணைச் செயலாளர்களாக ராஜா, மாதவி, நாகராஜ்,  பாலகிருஷ்ணன், ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

கூட்டத்தில், தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணிகளை ஒப்பந்தத்தில் விட அறிவிக்கப்பட்ட அர சாணை 152,139, 10-ஐ கைவிட வேண்டும். 10, 12 ஆண்டுகள் பணி செய்த தூய்மை பணி யாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். Human Grid நிறுவனம், தூய்மைப் பணியா ளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள  தினக்கூலி ரூ.630-ஐ வழங்க வேண்டும். பி.எப்.  அறிவித்த தினக்கூலிக்கான தொகையை செலுத்தி, அதற்கான ரசீதை வழங்க வேண்டும்.

அரசு அறிவித்த கொரோனா ஊக்கத் தொகை ரூ.15,000 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரி சீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.