தஞ்சாவூர், நவ.23 - நரிக்குறவர் இன மக்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டை வரு வாய் கோட்டாட்சி யரை, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் நரிக்குறவர் இன மக்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில் ரயில்வே தண்டவாளம் பகுதி யில், சாலையோரத்தில் சுமார் 25 ஆண்டு களுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தி னர் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வசித்து வருகின்றனர். அப்பகுதியில் எப்பொ ழுதும் தண்ணீர் தேங்கிக் கிடப்பதால், குடியிருப்பவர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சிஐடியு நிர்வாகிகள் தொடர் நடவடிக்கையின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நரிக்குறவர் இன மக்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்தார். ஆனால் அப்பகுதி மக்கள், முக்கியஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைப் பட்டா வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீயை சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், பட்டுக் கோட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி ஆகியோர் நரிக்குறவர் இன மக்க ளுடன் சென்று சந்தித்து மனைப் பட்டா, வீடு கேட்டு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை பரிவுடன் கேட்டறிந்த வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தர வின்படி, அவர்களுக்கு ராஜாமடம் அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரி அருகே இடம் ஒதுக்கி இருப்பதாகவும் விரைவில் அவர்களுக்கு முதலமைச்சரால், இ-பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நடவடிக்கை எடுத்து வருவதாக” தெரிவித்தார். மேலும் அவர்கள், தற்காலிகமாக குடியி ருப்பதற்கு செட் அமைத்து, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்ப டும் எனவும், விரைவில் படிப்படியாக அவர்களுக்கு குடியிருப்பு கட்டித் தர நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சி யர் தெரிவித்தார். மேலும், அவர்கள் “குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்” எனவும் வருவாய் கோட்டாட்சி யர் நரிக்குறவர் இன மக்களிடம் கேட்டுக் கொண்டார். அப்போது பட்டுக்கோட்டை ஆதி திராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ராமச் சந்திரன், வட்டாட்சியர் சுகுமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர். சிபிஎம்-சிஐடியு தொடர் நடவடிக்கை யால், தங்களது நீண்ட காலக் கோரிக்கை யான மனைப்பட்டா, குடியிருப்பு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நரிக்குற வர் இன மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.