பாபநாசம், ஜுன் 21-
அரசுத் துறைகளில் காலிப் பணியி டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளி யிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அர சில் காலியாக உள்ள பணியாளர்களைத் தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மூலம் தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
மேலும், சட்டமன்ற பேரவைக் கூட்டத் தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறு வனங்களுக்கும், டி.என்.பி.எஸ்.சி மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆண்டு சுமார் 10,000 பணியிடங்களை நிரப்பத் தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் தனியார்த் துறையில் வேலை இழப்பை சந்தித்தோர், புதிதாக பட்டம் பெற்ற மாண வர்கள் என தேர்வாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் 10,000 பணி யிடங்கள் போதுமானதாக இல்லை.
தேர்வாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 15,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அதேபோல் ஆவின், போக்குவரத்து, மின் சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளைத் தேர்வாணையம் மூலம் நிரப்ப உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண் டும் என கூறியுள்ளார்.