districts

img

நகர பேருந்து இயக்கக்கோரி மறியல் போராட்டம் அறிவிப்பு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

திருச்சிராப்பள்ளி, செப்.29- திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திரு வெள்ளறை மற்றும் தில்லாம்பட்டி வழியாக சென்று வந்த அரசு நகர பேருந்து கொரோனா காலத்தில் நிறுத்தப்  பட்டது. ஆனால் இந்த பேருந்து மீண்டும் இயக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லாம்பட்டி  கிளை சார்பில் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை யில் மண்ணச்சநல்லூர் காவல்துறை உதவி ஆய்வாள ரிடம் செப்டம்பர் 20 அன்று மனு கொடுக்கப்பட்டது. மேலும் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கிளை மேலாளர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சந்திரன், சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் மனோ கரன், கிளை செயலாளர்கள் பெரியசாமி, முருகேசன்  உள்பட ஊர்மக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை யில் வழக்கம் போல் காலை 8 மணிக்கு அரசு நகர பேருந்தை இயக்குவது என முடிவானது.

;