districts

மாற்றுத்திறனாளி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலத்திட்ட அட்டை பெற செப்.6 முதல் சிறப்பு முகாம்கள்

திருச்சிராப்பள்ளி, செப்.2 - தொழிலாளர் நலத்துறை  மற்றும் மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் இணைந்து மாவட்டம் முழு வதும் ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறனாளி அமைப்பு சாரா தொழிலாளர்களுக் கான இணையதள பதிவு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதன்படி செப். 6 அன்று  துறையூர், செப்.7 அன்று முசிறி, செப். 8 அன்று திரு வெறும்பூர், செப்.9 அன்று தொட்டியம், செப்.14 அன்று மணப்பாறை, செப்.15 அன்று மருங்காபுரி, செப்.20 அன்று உப்பிலியபுரம் மற்றும் செப்.21 அன்று தா. பேட்டை ஆகிய ஒன்றியங் களில் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வாழ்வாதார இயக்க மேலாண்மை அலு வலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி  வரை இணையதளம் வாயி லாக பதிவேற்றம் செய்யப் பட்டு, தொழிலாளர் நல வாரிய அட்டைகள் வழங்கப் பட உள்ளன. மேலும் திருச்சி கிழக்கு  பகுதியை சார்ந்த மாற்றுத்தி றனாளிகளுக்கு செப்.13 ஆம்  தேதி மரக்கடை, சையது  முர்துசா பள்ளியிலும், திருச்சி மேற்கு பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளி களுக்கு செப்.22 ஆம் தேதி இராமலிங்க நகரில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி தொண்டு நிறுவனத்திலும் நடைபெற உள்ளது.  இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப் பட்ட அலைபேசி எண் மற்றும்  வங்கிக் கணக்கு புத்தகம்  உள்ளிட்ட ஆவணங்களுடன் 18 வயதிற்கு மேற்பட்ட அமைப்பு சாரா மாற்றுத் திறனாளி தொழிலாளர்கள் பங்கேற்கலாம். ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கான நலவாரிய அட்டை வைத்திருந்தாலும் இ-சார்ம் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.  இதற்கான பதிவு கட்ட ணம் ரூ.50 செலுத்தி அட்டை பெற்றுக் கொள்ளலாம். இச்சிறப்பு முகாம்களில் 18  வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்க ளது குடும்ப உறுப்பினர்க ளும் கலந்து கொண்டு பயன டையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.