புதுக்கோட்டை, ஏப்.17- புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், பொன்னமராவதி, புதுக் கோட்டை பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை நிகழ்வான நிழல் இல்லா நாள் செய்து காண்பிக்கப் பட்டது.
இந்நிகழ்வினை கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச் சிப்பட்டி, கந்தர்வகோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, காட்டுநாவல் நடுநிலைப் பள்ளிகளிலும், வெள்ளாள விடுதி அரசு உயர் நிலைப் பள்ளி, தெற்கு வாண்டான் விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளி, அன்னவாசல் ஒன்றி யம் பூங்குடி நடுநிலைப் பள்ளி, பொன்னமராவதி ஒன் றியம் வார்ப்பட்டு, கருப்புக் குடிப்பட்டி தொடக்கப் பள்ளி கள், கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி நடுநிலைப் பள்ளி, கறம்பக்குடி அரசு கல்லூரி உள்ளிட்ட பகுதி களில் உள்ள மாணவ, மாண விகள் கண்டுகளித்தனர்.
இந்நிகழ்விற்கான ஏற் பாடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறி வியல் இயக்க பிரச்சார உப குழுவினர், மாவட்ட, வட்டார அளவிலான நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந்த னர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.