தஞ்சாவூர், ஆக.16-
சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 121 நிறுவனங்கள் மீது தொழிலா ளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத் துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய விடு முறை தினமான சுதந்திர தினத்தன்று தொழி லாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறதா என சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருச்சி கூடுதல் தொழி லாளர் ஆணையர் ஜெயபாலன், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோரின் அறிவுரைப்படி, தஞ்சை தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) கமலா தலைமையில், துணை ஆய்வா ளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தனி யார் நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை, கும்பகோணம், பட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடை கள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள், மோட்டார் வாகன போக்கு வரத்து நிறுவனங்களில் சுதந்திர தினத் தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்து டன் கூடிய விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக் கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
133 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 69 நிறுவனங்கள், 43 உணவு நிறுவனங்கள், 9 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள் என மொத்தம் 121 நிறுவனங்களில் முரண்பாடு கண்ட றியப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் கமலா தெரிவித்துள்ளார்.