பழுதடைந்த ரயில்வே பாலத்தில் என்ஐடி குழுவினர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் பகுதி கடந்த ஜன வரி 12 ஆம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அதன் பின்னர் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 2 மாதத்திற்கு மேலாக சீரமைக்கும் பணிகள் நடந்து வரு கின்றன. இந்நிலையில், ஞாயிறன்று இரவு முழுவதும் பாலத்தின் மேல் ஒரு லாரியை நிறுத்தி வைத்து திருச்சி என்.ஐ.டி. நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில் பாலத்தின் உறுதித் தன்மை நிரூபிக்கப்பட்டால், மீண்டும் போக்குவரத்து தொடங்கும் என்று நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.
சிபிஎம் புதிய கிளை மணப்பாறையில் துவக்கம்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவக்க விழா சனிக்கிழமை நடந்தது. விழாவிற்கு செல்வம் தலைமை வகித்தார். சிபிஎம் மணப்பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், வட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் பிற கட்சிகளிலிருந்து விலகிய 11 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த னர். புதிய கிளையின் செயலாளராக எம்.பரமசிவம் தேர்வு செய்யப்பட்டார்.
இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி
தஞ்சாவூர், மார்ச் 3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், கிராஅத் போட்டி மற்றும் இஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி உடையநாட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி வட்டார மக்தப் மதரஸா மாணவ, மாணவி யருக்கான கிரா அத் போட்டி நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பகாவுதீன் உலவி சித்தீகி தலைமை வகித்தார். இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற கிராஅத் போட்டியில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சிறப் பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் ஹாஜா முகைதீன் மிஸ்பாஹி, மெளலவி அபுபக்கர் உஸ்மானி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
பறவைகள் கணக்கெடுப்பு
தஞ்சாவூர், மார்ச் 3- தஞ்சாவூர் வனக்கோட்டம் பட்டுக்கோட்டை வனச்சரகம். ஆவணம் பீட் மற்றும் ஒரத்த நாடு பீட்டிற்குட்பட்ட எட்டி வயல், பள்ளத்தூர் கண்ணு டையங்குளம், அதம்பை ஏரி, குறிச்சி ஏரி, இடையாத்தி பெரியகுளம் மற்றும் அரு மத்தேரி ஆகிய இடங்களில், தஞ்சாவூர் மாவட்ட வன அலு வலர் அகில் தம்பி உத்தரவின் படி, நிலப் பறவைகள் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேக ரன் தலைமையில், அலுவ லர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். செம்போத்து, ஆற்று ஆலா, பனங்காட்டு, சாம்பல் கதிர்குருவி உள்ளிட்ட பற வைகள் நடமாட்டம் கண்டறி யப்பட்டது. வெளிநாட்டு பற வைகள் வலசை அதிகம் உள்ளதா என்ற நோக்கில், இது போல் ஆண்டுக்கு ஒருமுறை, வனத்துறை சார்பில் கணக் கெடுப்பு நடத்தப்படுவது குறிப் பிடத்தக்கது.
தடையை மீறி போராட்டம் சிபிஐ நிர்வாகிகள் 5 பேர் விடுதலை கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு
கும்பகோணம், மார்ச் 3- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தமிழக விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் போலீசாரின் தடையை மீறி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, நிர்வாகிகள் மதியழகன், தியாகராஜன், ரவி, குரு சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை கூறப்பட்டது. இதில் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, நிர்வாகிகள் மதியழகன், தியாகராஜன், ரவி, குருசாமி ஆகிய ஐந்து பேரை யும் விடுதலை செய்து, கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் இளவரசி உத்தரவிட்டார்.
மாணவர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர், மார்ச் 3- தஞ்சாவூர் மாவட்டம், இராஜகிரி தாவுத் பாட்ஷா கல்லூரி யில், உயிர் அறிவியல் துறை சார்பாக, கல்லூரிகளுக்கு இடை யேயான XTRONICA - 2K24 என்ற போட்டிகள் நடைபெற்றன. இதில், தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி உயிர் அறிவியல் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். 14 கல்லூரிகள் பங்கேற்று, பல விதமான போட்டிகள் நடை பெற்றன. இதில் முதல் பரிசுக்கான கோப்பையை மருது பாண்டியர் கல்லூரி மாணவர்கள் வென்றனர். உயிர் அறிவி யல் துறை சார்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி நிறுவனங்களின் தலை வர் கொ.மருதுபாண்டியன், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், உயிர் அறிவியல் துறை தலைவர்கள் மற்றும் பேரா சிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் சோலார் திட்டத்தில் இணைய பதிவு செய்யலாம்
கும்பகோணம், மார்ச் 3- ஒன்றிய அரசின் சோலார் திட்டத்தில் இணைய தபால் நிலையங்களில் பதிவு செய்யலாம் என கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கும்பசுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் , வீடு களில் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து, மக்களே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், சோலார் பயன்படுத்துபவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் சேருபவர்கள், சோலார் மூலம் தங்க ளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன், உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை, ஒவ்வொரு குடும்பமும் மிச்சப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். சோலார் பேனல் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற் கும் உதவும். இத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்க ளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தபால் துறை சார்பில் தபால்காரர்கள் ஈடுபட ஒன்றிய அரசு அறிவுறுத்தி யுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள தபால்காரரையோ அல்லது அருகி லுள்ள அஞ்சல் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு, தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
மனைவி இறந்த துக்கம்: கணவன் தற்கொலை
தேனி, மார்ச் 3- தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணியை அடுத் துள்ள முதுவாக்குடி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (54). இவ ரது மனைவி பாண்டியம்மாள். இவர் ஒரு மாதம் முன்பு இறந்துவிட்டார். இதனால் ராமர் துக்கம் தாளாமல் புலம்பி வந்துள் ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராமர் சில நாட்களுக்கு முன் விஷம் அருந்தி மயங்கினார். இவரை போடி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யிலும் சிகிச்சைக்கு சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சர்வதேச ரோட்டரி இயக்குநராக
திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம்.முருகானந்தம் தேர்வு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 3 - திருச்சி எக்ஸெல் குழு மங்களின் தலைவரும் முன் னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான எம்.முரு கானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் 17 பேர் மட்டுமே இதில் இயக்கு நர்களாக உள்ளனர். அதில் ஒருவராக முருகானந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோட்டரி இண்டர்நேஷனல் தலைவர் மற்றும் இந்த போர்டு இயக்குநர்கள்தான் ரோட்டரி திட்டங்களை வடி வமைப்பர். அதைத் தொடர்ந்து ஞாயிறன்று திருச்சியில் அவ ருக்கு ரோட்டரி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் முருகானந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வ தேச ரோட்டரி என்பது 119 ஆண்டுகளை கடந்து, சமூக சேவையை நோக்கமாக வைத்து 1.4 மில்லியன் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. உல களாவிய போலியோ ஒழிப்புக்கு ரோட்டரி இது வரை ரூ.36 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது. போலியோவை ஒழித்த தில் ரோட்டரிக்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போது போலியோ 99.9 சதவீதம் குறைந்துள்ளது. உலகின் 122 நாடுகளில் உள்ள கிட்டத் தட்ட மூன்று பில்லியன் குழந் தைகளை இந்த முடக்குவாத நோயிலிருந்து பாதுகாக்க ரோட்டரி உறுப்பினர்கள் 2.1 பில்லியன் அமெரிக்கா டாலர்களை வழங்கியுள்ளனர். ரோட்டரி அறக்கட்டளை மூலம் உலக அமைதி, சமா தானத்தை மேம்படுத்துதல், கல்வி வழங்குதல், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கி யத்தை பாதுகாத்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு இதுவரை நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக வழங்கியுள்ளது. ரோட்டரி இண்டர்நேஷனல் தலைவர்களாக இதுவரை 4 இந்தியர்கள் இருந்துள்ள னர். ரோட்டரியை பொறுத்த வரை இந்த 17 இயக்குநர் கள் குழு இந்த சர்வதேச அமைப்பின் கொள்கை களை நிறுவுகிறது. வருகிற 2025-27 பன்னாட்டு ரோட்டரி இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள எனக்கு, இந்தியா நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன” என்றார். நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி, ஆளுநர் நிய மனம் கார்த்திக், மாவட்ட நிர்வாக செயலாளர் எஸ். ஆர்.செந்தில்குமார், பெல் சிட்டி சங்க தலைவர் தேர்வு லட்சுமிபதி, ரோட்டரி மாவட் டச் செயலாளர் நிகழ்ச்சி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.
சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்அரியலூர் மாவட்ட கல்வி அதிகாரி
நடவடிக்கை எடுக்க மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
திருவள்ளூர், மார்ச் 3- சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது விசாரணை நடத்தி துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில பொதுச் செயலாளர் சா. ஞானசேகரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் அரியலூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் காலியானது. அப்பணியிடத் திற்கு மாவட்ட கல்வி அலு வலருக்கு இணையான பணித் தகுதி கொண்ட, மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யுமாறு எமது அரிய லூர் மாவட்ட கழகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவல ருக்கு கடிதம் அளித்தது. கடிதத்தை பரிசீலனை செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி இளையராக (ஜூனியர்) உள்ள தலைமை ஆசிரி யரை தனியார் பள்ளி பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலராக, தன்னிச்சையாக,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நியமித்துள்ளார். இதற்கு தலைமை ஆசிரியர்கள் கழகம் அப்போதே கண்ட னத்தை பதிவு செய்தது. இது தொடர்பாக அமைப் பின் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செய லாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி இயக்குநரை பிப்ரவரி 23 அன்று சந்தித்து அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி மாத இறுதியில் இடைநிலை, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் காலியாகும் நிலை உள்ளதால், அப்பணியிடத்தி லாவது மாவட்டத்தில் முன் னுரிமை பட்டியலில் உள்ள மாநிலக் கழகத்தின் மகளிர் பிரிவு செயலாளராக உள்ள தி.இன்பராணியை (அரசு மேல்நிலைப்பள்ளி இலந்தை கூடம், அரியலூர் மாவட்டம் ) நியமிக்க பரிசீலனை செய்யு மாறு பள்ளிக் கல்வி இயக்கு நரிடம் மாநில கழகத்தின் சார்பாக கோரிக்கை வைக் கப்பட்டது.கோரிக்கையை நிறைவேற்றுவதாக பள்ளிக் கல்வி இயக்குநர் தெரி வித்துள்ளார். தற்போது முன்னுரிமை பட்டியலில் உள்ள இன்ப ராணி பெயரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிராகரித்தது மட்டுமல்லா மல், காலியாக உள்ள இடை நிலை மாவட்ட கல்வி அலு வலர் பணியிடத்தில், பொறுப்பு இடைநிலை, மாவட்ட கல்வி அலுவலராக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை விதி களை மீறி சட்டத்திற்கு புறம்பாக நியமித்துள்ளார். அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறையையும், தமிழக அரசையும் தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தி யுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.