புதுக்கோட்டையை அடுத்த சிவபுரம், ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் இணையக் கல்விக்கழகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.