மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வழங்கப்பட்ட நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்து வாகனங்களின் சாவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர்.