districts

img

ஒரே நாளில் 5 இடங்களில் புதிய மின்மாற்றிகள் எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஜூன் 24 -

     கந்தர்வகோட்டை ஒன்றி யத்தில் ஒரே நாளில் ஐந்து புதிய மின்மாற்றிகளை கந்தர்வகோட்டை தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் போதிய மின்  அழுத்தத்தில் மின் விநி யோகம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதனால், விவ சாயிகளுக்கு போதுமான மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். ஆங் காங்கே போதிய திறன் கொண்ட புதிய மின்மாற்றி களை அமைத்துத் தர  வேண்டுமென சட்டப் பேரவை உறுப்பினர் எம். சின்னதுரையிடம் விவசாயி களும், பொதுமக்களும் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து தொகு தியின் பெரும்பாலான இடங் களில் புதிய மின்மாற்றிகள் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஏற்பாடு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை ஒன்றி யம் சுந்தம்பட்டி கிராமத் தில் புதிதாக மூன்று மின் மாற்றிகளையும், கல்லாக் கோட்டை கிராமத்தில்  இரண்டு மின்மாற்றிகளை யும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

   இந்நிகழ்வில் உதவி மின் செயற்பொறியாளர் மு. ராஜ்குமார், உதவி மின்  பொறியாளர் சு.ரவிச் சந்திரன்  சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் ஆர்.ரத்தின வேல், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, அர வம்பட்டி ஊராட்சி மன்ற  தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.