புதுக்கோட்டை, ஏப் 9-
துல்லிய பண்ணைய சொட்டுநீர் பாசன முறையில் ஓர் புதிய தொழில் நுட்பம் செயல் விளக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கூழை யன்காடு, குப்புடையான்பட்டி கிரா மங்களில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து பாசன நீர் சிக்கன தொழில்நுட்ப செயல் விளக்கத்தை புதுக்கோட்டை மாவட்டம் கூழையன்காடு டி.சின்ன துரை, குப்புடையான்பட்டி எஸ்.தேவி ஆகியோரின் கொய்யா மற்றும் பப்பாளி தோட்டங்களில் நடத்தியது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் அறிமுக உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “சொட்டுநீர் பாசன முறையை மேலும் திறனுள்ள தாக மாற்றும் வகையில் “சுவார்” என்னும் “வேளாண் உயிர்பித்தலுக் கான நீர் மேலாண்மை முறை” சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்ட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை தற்போ துள்ள சொட்டு நீர்பாச குழாய்களு டன் இணைப்தால் மேலும், 40 விழுக்காடு வரை பாசன நீரை சேமிக்கலாம் என கண்டறியப்பட்டுள் ளது. இந்த தொழில்நுட்பத்தை பரிட் சார்த்த முறையில் பத்து விவசாயி கள் தோட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய இயக்குநர் கே.எஸ்.கோபால் பேசு கையில், இந்த “சுவார்” கருவியின் ஒருபுறமானது சொட்டுநீர்ப்பாசன குழாயுடன் இணைக்கப்பட்டு, “குவார்ட்ஸ்” கற்கள் பொருத்தப் பட்ட மறு பகுதி பயிரின் வேர்ப்பகுதி யின் ஊடுருவும் தன்மையின் ஆழத்திற்கேற்ப பொருத்தப்படுகின் றது. இதனால் நீர்த் துளிகள் உறிஞ்சு வேரின் அருகிலேயே விழுகிறது. இதன் மூலம் பாசனநீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. இதன் மூலம் களைகள் வளர்வது கட்டுப்படுத்தப் பட்டு மகசூல் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாட்டுத்திறன் மேம்படுத்தப் படுகிறது. மா, கொய்யா, சப் போட்டா, பப்பாளி போன்ற நீண்ட நாள் பயிர்களுக்கு இத்தொழில்நுட் பம் மிகச் சிறந்ததாக அமையும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப் பாளர் அஜய் ஜக்கோஜீ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பி.மணிகண்டன், செல்வமுகிலன், பெஸ்ட் நிறுவன இயக்குநர் அதியமான் கள அலு வலர் விமலா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.