தஞ்சாவூர், மே. 7 -
தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் பகுதியில் ஏற்கெ னவே உள்ள ரவுண்டானா வில் (சுற்றுவட்டத்தில்) ஒரு பகுதி இடிக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை புதி தாக தற்காலிக ரவுண்டா னா (சுற்றுவட்டம்) அமைக் கப்பட்டது.
தஞ்சாவூர் காந்தி-இர்வீன் ஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை - நீதி மன்றச் சாலை சந்திப்பில் கடக்கும்போது வாகன ஓட்டு நர்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தது. விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டு நர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நீதிமன்றச் சாலை நுழைவுப் பகுதியில் இடது புறம் இருந்த ரவுண்டானா (சுற்றுவட்ம்) முழுவதுமாகவும், வலது புறம் நினைவுத் தூணுடன் கூடிய ரவுண்டானாவில் (சுற்றுவட்டத்தில்) ஒரு பகுதியும் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக தற்காலிக ரவுண்டானா (சுற்றுவட்டம்) சனிக்கிழமை மாலை அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக ரவுண் டானா (சுறுறுவட்டம்) சில நாட்களுக்கு தொடரும் என்றும், இதிலுள்ள நிறை, குறைகளை அறிந்து நிரந்தர மான ரவுண்டானா (சுற்று வட்டம்) அமைக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை யினர் தெரிவித்தனர்.