கும்பகோணம், செப்.25 - கும்பகோணம் - மதனத்தூர் வழித்தடத் தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பயன்பெ றும் வகையில் புதிய பேருந்து சேவையை கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் நகரங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடத்தின் குறுக்கே மதனத் தூர் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதனால் ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லக்கூடிய பயண தூரம் சுமார் 15 கிலோ மீட்டர் குறைவதோடு, பயண நேரமும் குறைகிறது. கும்பகோ ணத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்ப டும் விரைவு பேருந்துகளும் இந்த வழித்தடத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் உள்ள குக்கிராமங்களை இணைக்கும் வகை யில் மதனத்தூர் கிராமத்தில் இருந்து நீலத்த நல்லூர், தேவனாஞ்சேரி, அசூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கும்பகோணம் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவையை கும்ப கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார். தினசரி இரண்டு முறை இயக்கப்படும் பேருந்து சேவையினால், மதனத்தூர் - கும்ப கோணம் இடையிலான பல்வேறு கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் இப்பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.