அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சிக்குட்பட்ட சிந்தாமணி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்தினையும், அருள்மொழி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடத்தினையும், பாப்பாக்குடி மற்றும் உட்கோட்டை ஆகிய கிராமங்களில் துணை சுகாதார மையக் கட்டிடத்தினையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.