தஞ்சாவூர், ஏப்.30 -
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மக்க ளவை உறுப்பினர் ச.சு.பழநி மாணிக்கம்.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற உலகப் புத்தக நாள் நிறைவு விழா வில் பங்கேற்ற அவர் பேசி யது:
மேடையில் பேசுவதும், எழுதுவதும் மிகப் பெரிய வரம். தஞ்சாவூர் மாவட்டத் தில் ஏராளமான எழுத்தா ளர்கள் இருந்தனர். தஞ்சா வூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளி அருகே பிறந்த எழுத்துச் சித்தர் பாலகுமார னின் இரும்புக்குதிரைகள் என்கிற புதினம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்கும். இவரைப் போல தஞ்சாவூரிலிருந்து சென்ற ஒவ்வொரு எழுத்தாளரின் சிந்தனைகள், கற்பனை கள் தனித்துவம் வாய்ந்தவை. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் களை வரிசைப்படுத்தி எழுதி னால், மிகப் பெரிய புத்த கம் வெளி வரும்.
இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுக்காக 300 க்கும் அதிகமானோர் படிக் கின்றனர். இவர்கள் படிப்ப தற்கு வசதியாக முதல் தளத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும். சிதிலமடைந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்களை உற்சாகப் படுத்துவது எனது கடமை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள் ளிட்ட போட்டித் தேர்வு களுக்கு தயாராகும் அவர்களுக்கு தேவையான உதவிகள் ஓராண்டுக்குள் செய்து கொடுக்கப்படும்” என் றார் ச.சு.பழநி மாணிக்கம்.
விழாவுக்கு இரா. கண் ணன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் பா.முத்து, வல்லம் தாஜூபால், டொமினிக் சேகர், இராகவ் மகேஷ், வாசகர் வட்டத் தலைவர் மா. கோபாலகிருட்டிணன் ஆகி யோர் பேசினர்.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
முன்னதாக, பா.சுரேஷ் வரவேற்றார். நிறைவாக, வாசகர் வட்டக் கூடுதல் துணைத் தலைவர் கோ. முத் தையா நன்றி கூறினார்.