தஞ்சாவூர், ஆக.19 தஞ்சாவூர் மறை மாவட்ட புதிய ஆயராக சகாயராஜ் தம்புராஜ் அடிகளார் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1952 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தஞ்சாவூர் மறை மாவட்டத்தில் தஞ்சாவூர், புதுக் கோட்டை, நாகை, மயிலாடுதுறை, பாளையங்கோட்டை, பட்டுக் கோட்டை, ஆவுடையார்கோவில் ஆகிய 7 மறை வட்டங்கள் உள்ளன. இந்த மறை மாவட்டத்தின் முதல் ஆயராக ஆரோக்கிய சுந்தரம் ஆண்டகை (1953 - 1986), இரண்டா வது ஆயராக பாக்கியம் ஆரோக் கியசாமி ஆண்டகை (1986 - 1997), மூன்றாவது ஆயராக ம. தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகை (1997 - 2023) ஆகியோர் இருந்தனர். இதைத்தொடர்ந்து, நான்கா வது ஆயராக சகாயராஜ் தம்புராஜ் அடிகளார் ஞாயிற்றுக்கிழமை மாலை பொறுப்பேற்றார். இதை யொட்டி, தஞ்சாவூர் மறை மாவட்ட திரு இருதய ஆண்டவர் பேரால யத்தில் ஆயர் திருநிலைப்பாட்டு விழா நடைபெற்றது. வாட்டிகனுக்கான இந்திய தூதரின் செயலர் பேரருள்திரு ஆல்பர்டோ நெப்போலிடானி முன்னிலையில் ஆயருக்கு திரு நிலைப்படுத்தும் வைபவம் நடை பெற்றது. திருநிலைப்பாட்டு கூட்டுத் திருப்பலியில் முதன்மை ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அடிகளார் (புதுச்சேரி - கடலூர் உயர் மறை மாவட்டப் பேராயர்), இணை ஆயர் கள் அந்தோணி பாப்புசாமி அடி களார் (மதுரை உயர் மறை மாவட்டப் பேராயர்), ஆரோக்கிய ராஜ் அடிகளார் (திருச்சி மறை மாவட்ட ஆயர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தஞ்சாவூர் மறை மாவட்ட பரிபாலகர் எல். சகாய ராஜ், தமிழக ஆயர்கள், தஞ்சாவூர், திருச்சி மறை மாவட்ட குருக்கள், பிற மறை மாவட்ட குருக்கள், கன்னியர்கள், பொது நிலையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.