திருவாரூர், மே 31-
திருவாரூர் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் நீர்மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ந் தேதி துவங்கப்பட்ட நீர்மோர் பந்தல், 45 நாட்களை கடந்து தொடர்ந்து மக்களின் தாகத்தை தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
முன்னதாக கிளை முதுநிலை மேலாளர் மற்றும் கோட்ட சங்க இணைச்செயலாளர் செந்தில் துவக்கி வைத்த நீர்மோர் விநி யோகம் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க முன் னாள் தலைவர் மன்சந்தாவின் நினைவு தினமான ஜூன் 8 வரை தொடர்ந்து நடை பெறவுள்ளது. பணியை கிளை சங்க பொறுப்பா ளர்கள் சித்தார்தன், கமலவடிவேலு ஒருங்கி ணைக்க, எல்ஐசி ஊழியர்கள் மட்டுமின்றி முகவர்களும் பணியில் தங்களை ஈடு படுத்தி கொண்டுள்ளனர்.