அரியலூர், ஜூலை 18-
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் மணி வண்ணன். இவரது மகள் அன்னபூரணி, உடையார் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து கடந் தாண்டு நீட் தேர்வு எழுதி னார்.
அத்தேர்வில் போதுமான மதிப்பெண் கிடைக்காத நிலையில், மருத்துவக் கல் லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற மாண வியின் லட்சியத்திற்கு, குடும்ப வறுமை தடையாக இருந் தது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்களின் பெரும் முயற்சியால், அரசுப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தின் நிதி உதவியுடன் துறை யூரில் உள்ள தனியார் பள்ளி யில் பயிற்சி பெற்று இந் தாண்டு நீட் தேர்வு எழுதி னார்.
இந்நிலையில், திங்க ளன்று தமிழக அரசு வெளி யிட்ட அரசு மருத்துவக் கல் லூரி மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு பட்டிய லில், அரசுப் பள்ளி மாண வர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 533 மதிப்பெண் கள் பெற்று மாநில அளவில் 7வது இடம் பிடித்துள்ளார் அன்னபூரணி. இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.