தஞ்சாவூர், மே 6-
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே.7) நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தாமரை சர்வதேசப் பள்ளியில் 1,609, கும்பகோணம் தாமரை சர்வதேசப் பள்ளியில் 648, தஞ்சாவூர் ப்ளாசம் பப்ளிக் பள்ளியில் 495, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி யில் 360, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் 648, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 1,104, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளியில் 576 மாணவ, மாணவிகள் என மொத்தம் 5,440 பேர் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
இதையொட்டி தேர்வு மையங்களில் குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதிகளும், தேர்வில் முறைகேடுகள் நடை பெறாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு எழுது பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.