districts

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜூலை 7 - தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கும் அதே நேரத்தில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  முன்பு எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி யின்கீழ் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற் குடையை ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து  வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந் தால் நீட் தேர்வை ரத்து செய்திருக்கலாம். ஆனால், தற்போது அமைந்துள்ள பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்வார்களா எனத்  தெரியாது. போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கப் போ கிறோம். அதே நேரத்தில், அனைத்து அரசுப் பள்ளி களிலும் அறிவியல் வகுப்பு மாணவர்களுக்கு  மட்டும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி  வகுப்புகளை நடத்த வேண்டும். பள்ளியின் வழக்கமான வகுப்புகள் முடிந்த பிறகு தினமும் மாலையில் இந்த சிறப்பு வகுப்பை  அரசு நடத்த வேண்டும். இதனால் மாண வர்கள் பயன்பெறுவர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்து உள்ளன. விபத்து இறப்புகளுக்கும், இதற்கும் அறிவிக்கப்படும் தொகையில் வேறுபாடு இருப்பது குறித்தும் பேசப்படு கிறது. இப்போது அறிவித்துள்ள தொகையை அரசு வழங்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்று வித்தியாசங்கள் இருப்பதை சரி செய்துவிட்டு, இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.