அரியலூர், மே 6-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ செங்கல் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயச்சந்தி ரன்-சூர்யா தம்பதி. இவர்கள் உடல்நிலை சரியில்லாத தங்களது 2 வயதுக் குழந்தையை இரு சக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பினர்.
அப்போது பொன்னேரி அருகே சூர்யா சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 2 பேர், சூர்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விட்டுத் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, ஜெயங் கொண்டம் காவல்துறையினர் முகமூடி திருடர்களைத் தேடி வருகின்றனர்.