districts

img

தேசிய வாக்காளர் தினம் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

பேராவூரணி, ஜன.25-  13-ஆவது தேசிய வாக்காளர்கள் தினத்தை  முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டாட்சியர் த.சுகுமார் தொடங்கி வைத்தார்.  அரசுக் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.ராணி, தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, நீல கண்டப் பிள்ளையார் ஆலயத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.  கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி யில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்வில் கல்லூரி முதல்வர் நா. தனராஜன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வரு வாய்த்துறை மற்றும் பாத்திமா மெட்ரிக் மேல்  நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற தேசிய  வாக்காளர் தின ஊர்வலத்தை ஜெயங்கொண் டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார்.
திருவாரூர் 
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் நடை பெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பேரணியானது, திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி யு.பி திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் உறுதி மொழி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.