districts

img

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிகளின் தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரூபியா ராணி,  அண்ணாமலை பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை பேராசிரியர்கள் வி.பாலசுப்ரமணியன், ஷண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர். பள்ளியின் தலைமை கல்விஅலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.