மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் கடந்த மே 2 ஆம் தேதி நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் தின படத்தொகுப்புப் போட்டியில், தமிழ்ப் பல்கலைக்கழக, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் ஒருங்கிணைந்த முதுகலை வரலாறு முதலாமாண்டு மாணவர் சு.நிதிஷ்ராஜா தமிழக அளவில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். மாணவரைப் பாராட்டி அதற்கான சான்றிதழை துணைவேந்தர் திருவள்ளுவன் வழங்கினார்.