புதுக்கோட்டை, மார்ச் 11 - ரூ.110 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஹாஷிஷையும், ரூ.1.05 கோடி மதிப்புள்ள 876 கிலோ கஞ்சாவையும் திருச்சி சுங்கத் தடுப்பு அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் திங்கள்கிழமை பறிமுதல் செய்த னர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடை யார்கோயில் தாலுகாவில் உள்ளது கடற் கரை கிராமமான மீமிசல். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மீமிசல் கிராமத்தில் உள்ள இறால் பண்ணை யில் உள்ள கொட்டகையில் ஹாஷிஸ், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சுங்கத் தடுப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி சுங்கத் தடுப்பு ஆணையரகத்தின் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது கொட்டகை பூட்டிய நிலையில் காணப்பட் டது. அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. தொடர்ந்து சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் பூட்டை உடைத்த அதிகாரி கள், கொட்டகையில் முழுமையாக சோதனை செய்தனர். சோதனையில், ஹாஷி, கஞ்சா போன்ற கடத்தல் பொருட்கள் அடங்கிய 84 பைகளை அதிகாரிகள் மீட்டனர். கொட்டகையில் மின்சாரம் இல்லாததால், மேற்படி பைகள் அருகில் உள்ள சுங்கத்துறை அலுவலகத் திற்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சோதனையில் ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹாஷி மற்றும் ரூ.1.05 மதிப்பி லான 876 கிலோ உலர் கஞ்சா போதைப் பொருட் கள் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் மருந்து கள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம்- 1985 மற்றும் சுங்கச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்படி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, மேலும் விசா ரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.