districts

img

நன்னிலம் பல்கலை. உறுப்புக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்த அரசாணையை நிறைவேற்ற மாணவர் சங்கம் வலியுறுத்தல்

நன்னிலம், மே 10 -  நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக (உறுப்பு) கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளையின்  7 வது கிளை மாநாடு திங்கள்கிழமை கிளை தலைவர் கா.அஜய் தலைமையிலும், செயலாளர் சு.அருணாச்சலம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் இரா.பகத்சிங் முன்னிலையிலும் நடைபெற்றது.  மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை செயலாளர் ஆறு.பிரகாஷ் உரையாற்றினார். மாவட்ட தலைவர் பா.ஆனந்த், மாவட்ட துணை தலைவர் இரா.சூர்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சமூக விரோதிகள் மற்றும் மதுபிரியர்களின் புகலிடமாக கல்லூரி வளாகம் மாறுவதைத் தடுக்க சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் இருக்கும் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க வேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கல்லூரிக்கென்று தனி விளையாட்டு மைதானம் வேண்டும். கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உறுப்புக் கல்லூரியை அரசு கல்லூரி என அறிவித்த அரசாணையை நிறைவேற்ற வேண்டும். கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிட வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிறைவுரையாற்றிய மாநில செயலாளர் வீ.மாரியப்பன் இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட 22 பேரை கொண்ட கிளைக் குழு மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை தலைவர் பிரதிபா மற்றும் செயலாளர் மருது ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.