மாணவர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை,பிப்.7- சாதி ஆதிக்க மனநிலையோடு மாணவனை மிரட்டி தனது செருப்பை கழட்டச்சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவா சன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை காவல்துறை இயக்கு நர் தலைமை அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வி.மாரியப்பன் ஆகி யோர் புகார் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் புத்து ணர்வு முகாமை பிப்.6 ஆம் தேதி துவக்கி வைக்க மாவட்ட ஆட்சி யர், அரசு அதிகாரிகள் உள்ளிட் டோருடன் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் வருகைதந்தார். அப் போது, அங்குள்ள விநாயகர் கோவில் முன்பாக கூடலூர் தாலுகா கார்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் கேத்தன் தன் குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்யச் சென் றுள்ளான்.
அப்பொழுது, அமைச்சர் சி. சீனிவாசன் அச்சிறுவனை பார்த்து ‘டேய் வாடா வாடா, இங்க வாடா’ என்று கூப்பிட்டு கை அசைத்தும் தனது காலில் உள்ள செருப்பை கழட்டு டா என்று கூறியுள்ளார். அமைச்சர் சொல்கிறார் என்பதா லும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இருந்ததாலும் பயந்துபோய் பொதுமக்கள் செய் தியாளர்கள் முன்னிலையில் அமைச்சரின் செருப்பை மாணவன் கேத்தன் கழட்டி விட்டுள்ளான். அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் பழங்குடியின சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்கு தெரிந் தும் மாணவன் கேத்தனை சாதி ஆதிக்க அதிகார மனநிலையோடு செருப்பை கழட்ட வைத்ததை இந்திய மாணவர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது . இதுகுறித்த செய்தி தமிழக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை களில் வெளியானது. மாணவன் கேத்தன் தனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியை உணர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா மசி னக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது வரை அமைச்சர் உள்ளிட்ட அதி காரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்து கிறது. எனவே காவல்துறை தலைவர் சாதி ஆதிக்க அதிகார மனநிலை யோடு மாணவன் கேத்தனை , தனது செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன், “அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால், மாணவர்கள் தங்களது பழைய செருப்புக்களை அமைச் சருக்கு அனுப்பும் போராட்டம் நடத்துவோம்” என எச்சரிக்கை விடுத்தார்.