நாகப்பட்டினம், பிப்.22- நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை கடைத்தெருவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் கீழையூர் ஒன்றியக் கிளை சார்பில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தாய்மொழி தின மொழியுரிமை பாதுகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்டத் தலைவர்.கவிஞர் ஆவராணி ஆனந்தன், மாவட்டப் பொருளாளர் க.ரமேஷ், மாவட்டச் செயலா ளர் ஆதி.உதயகுமார், கீழையூர் ஒன்றிய கிளை தலைவர் மு.பத்மநாதன், செயலாளர் ஏ.வி.எம்.பகத்சிங், பொருளாளர் கே.ட்டி. முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், 25 செம்மலர் ஆண்டு சந்தா கீழையூர் ஒன்றியக் கிளையின் சார்பில் முதற்கட்டமாக வழங்கப்பட்டது. கிளை துணை செயலாளர் எம்.கே.தங்கமணி நன்றி கூறினார்.