districts

img

கீழ்வேளூர் தொகுதியில் ரூ.58.42 லட்சத்தில் கட்டிய புதிய கட்டிடங்களை அமைச்சர் ரகுபதி திறப்பு: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்றார்

நாகப்பட்டினம்,அக்.19-  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு அரசு கட்டிடங்களை  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார். இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி பங்கேற்றார். கீழ்வேளூர் சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட நாகை ஒன்றிய பகுதி களில் ரூ.58.42 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம், பயணியர் நிழற்குடை உள்ளிட்ட அரசு கட்டிடங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ்,மீன் வளர்ச்சி கழக தலைவர். என்.கௌதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதுச்சேரியில் நியாய விலை கடை  புதுச்சேரி ஊராட்சி  குட்டி ஆண்டவர்தெரு பகுதியில் 600 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் ரூ.14.59 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் திறந்து வைக்கப் பட்டது.  ஊராட்சி மன்ற தலைவர் கோமதி ஜீவாராமன்,சிபிஎம் நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடிவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடுகச்சேரியில் அங்கன்வாடி மையம் - பயணியர் நிழற்குடை  வடுகச்சேரி ஊராட்சியில் ரூ. 11.62 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தையும், வடுகச்சேரி கிழக்குத் தெருவில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற் குடையும் திறந்து வைக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் வட்டாட்சி யர் ரமேஷ் குமார்,   ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி இளைய ராஜா, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பி னர் கே.செந்தில்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். மகாதானத்தில்  நியாய விலைக்கடை  மகாதானம் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் செலவில் புதிய நியாய விலை கடை திறந்து வைக்க பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி பாலகிருஷ்ணன்,ஒன்றிய குழு தலைவர் வே.அனுசுயா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப. குமார், பா.ரேவதி , ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் என்.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செம்பியன் மகாதேவியில் அங்கன்வாடி மையம்   செம்பியன் மகாதேவி ஊராட்சி யில் ரூ.11.62 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம்  திறந்து வைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் ரெனிஸ்வரி சுரேஷ், சிபிஎம் கிளைச் செயலாளர்  என்.ஞானசேகரன். திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.