districts

img

அரசு பள்ளி மாணவர்களை சந்தித்த நாகைமாலி எம்எல்ஏ

நாகப்பட்டினம், ஜூன் 15-

     தமிழ்நாடு அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை யை அதிகப்படுத்தும் நோக்  கில் கீழ்வேளூர் சட்டமன்ற  உறுப்பினர் வி.பி.நாகை மாலி, வடக்காலத்தூர் ஊரா ட்சி ஒன்றிய நடுநிலை பள்  ளிக்கு நேரில் சென்று அரசு சார்பில் இலவசமாக வழங்  கப்படும் நோட்டு புத்தகங் களை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்  

    மேலும் பள்ளி  வளாகத் தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ.6 லட்சம் செல வில் ஃபேவர் பிளாக் கற் கல் மூலம் போடப்பட்ட சிமென்ட் சாலையையும் திறந்து வைத்தார்.

     மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்காலத்  தூர் கிளை சார்பில் வழங் கப்பட்ட 200 மரக்கன்றுகள் நடும் விழாவை, நாகைமாலி தொடங்கி வைத்தார். பள்ளி யில் செயல்படும் மாணவர் களின் திறனை மேம்படுத்த புதிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பினையும் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் சிபிஎம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.அபு பக்கர், பள்ளி தலைமை ஆசி ரியர் செ.பத்மாவதி, கிராம  நிர்வாக அலுவலர் சு.மதிவா ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.ஜெய பால், ஊராட்சி செயலாளர் சக்திவேல், சிபிஎம் ஒன்றி யக் குழு உறுப்பினர் ஜெ.நாக ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.