districts

img

ஆதமங்கலம் ஊராட்சிக்கு புதிய மின்மாற்றி: நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம், ஜூன் 25 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ஆதமங்கலம் ஊராட்சியில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார் நாகை மாலி எம்எல்ஏ. கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி தென்மருதூர் கிரா மத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மின் நுகர்வு பற்றாக்குறை நிலவியதால், சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஏற்பாட் டில், செவ்வாயன்று புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. புதிய மின்மாற்றியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தொடங்கி வைத்தார். சிபிஎம் கீழ்வே ளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், உள்ளாட்சி முன்னாள் பிரதி நிதிகள், மின் துறை அதிகாரிகள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.