நாகப்பட்டினம், பிப்.14 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடு பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூர் பேரூராட்சி 12 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.சாந்தியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி, திமுக மாவட்ட துணை செயலாளர் மனோ கரன், வடக்கு ஒன்றிய செயலாளர் ப. கோவிந்தராஜன், தெற்கு ஒன்றிய செய லாளர் க.பழனியப்பன் ஆகியோர் வாக்குச் சேகரித்தனர். வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வீ.பீ.நாகைமாலி பேசுகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் போட்டியிடுகிற சிபிஎம் வேட்பாளர் எம்.சாந்தி வசிக்கும் பகுதி மக்களுக்கு நீண்ட காலமாக இலவச வீட்டு மனை பட்டா கிடைக்காத போது, 15 வருட கால போராட்டத்தின் மூல மாக 63 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுக் கொடுத்தோம். இலவச வீட்டு மனை பட்டா ஆணை மட்டும் வாங்கி கொடுத்ததோடு மட்டு மல்லாது, ஒரு நாள் முழுவதும் நின்று அப்பகுதி மக்களுக்கு அரசு அதிகாரி களுடன் அவரவருக்கு உரிய வீட்டு மனையை பிரித்துக் கொடுத்தோம். மேலும் அப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகள் செய்து கொடுத்து இருக்கி றோம். மேலும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படை யில் பழுதான சாலைகளை சீர் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்கு றுதிகளை அளித்து வாக்குகளை சேகரித்தார். இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எம்.அபு பக்கர், சிபிஎம் தெற்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.முத்தையன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாண்டியன், டி.துரைராஜ் மற்றும் மாதர், வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.