அரியலூர், நவ.18- அரியலூர் பேருந்து நிலையத்து க்கு அருகே நகராட்சிக்கு பின்புறம் 70 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை உள்ளது. இந்நிலையில் வீட்டு மனைக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளை சந்தித்து பல முறை மனு அளித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் இது நாள் வரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட வர்கள் வீடு கட்டி குடியிருப்பதற்கு பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் மனு அளித்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். அப்போது, உழைப்பாளி மக்கள் வீட்டுமனையில் குடியிருந்து வசிப்பதற்கு பாதை இல்லாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதை கேட்டு எனது தலைமை யில் போராட்டமும் நடைபெற்றது. அதன் பிறகும் தங்கள் நிர்வாகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் தெரி வித்தார். எனவே, மனு மீது உரிய கவனம் செலுத்தி விரைவில் பாதை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி னார். மனுவை பெற்றுக்கொண்ட அரி யலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கூடிய விரைவில் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், மண்டபத்தேரி கிராமத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்கள் ரேஷன் கடைக்கு செல்ல வெகுதூரம் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், அப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப் பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணி வேல், கே கிருஷ்ணன், வி.பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரை சாமி, கட்சியின் மூத்த தலைவர் ஆர். சிற்றம்பலம் ஆகியோர் உடன் இருந்தனர்.