நாகப்பட்டினம், மே 31-
தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர்கள் சங்க பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயிலில் மாவட்டத் தலை வர் வி.சித்ரா தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி கலந்து கொண்டு சத்து ணவு ஊழியர்களின் கோரிக் கைகளை தமிழ்நாடு அர சின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து உரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பா.ராணி துவக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கா. இராஜூ விளக்கவுரையாற்றி னார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியம், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், நெடுஞ்சா லைத்துறை சாலைப்பணி யாளர் சங்க நிர்வாகி ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி. அன்பழகன் சிறப்புரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் க.பாலாம் பாள் நன்றி கூறினார். பின் னர் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.