தஞ்சாவூர், ஏப்.14- தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி யில், இந்தியா கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக ச.முரசொலி போட்டியிடு கிறார். அவருக்கு வாக்கு கேட்டு, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேது பாவாசத்திரம் ஒன்றியம், சேதுபாவா சத்திரம், மருங்கப்பள்ளம், நாடியம், வாத்த லைக்காடு, ஆண்டிக்காடு, சோலைக்காடு, விளங்குளம், செந்தலைப்பட்டினம், குப்பத் தேவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமையில் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. திருவையாறு திருவையாறு ஒன்றியம் வரகூர் கடை வீதியில், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு வாக்குக் கேட்டு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.மதியழகன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், திமுக திருவையாறு தெற்கு ஒன்றியச் செயலாளர் கௌதமன், திருவையாறு ஒன்றியப் பெருந்தலைவர் அரசபிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.