districts

img

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பேராவூரணியில் பரவி வரும் மர்மக் காய்ச்சல்

தஞ்சாவூர், டிச.9- தஞ்சை மாவட்டம், பேரா வூரணியில் கடந்த ஒரு ஆண்டு காலமாக நத்தை வேகத்தில் நடந்து வரும் சாலைப் பணிகள் காரணமாக பொதுமக்கள், வியா பாரிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.  பேராவூரணி நகர மேம் பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த அதிமுக ஆட்சிக்கா லத்தில் பேராவூரணி கடைவீதி சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியது.  இதையொட்டி, சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி, மின்கம்பங்கள், மின்மாற்றிகளை இடம் மாற்றும் பணிகள், சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடை பெற்றன.  

இப்பணிகள் முழுமை பெறா மல் ஆங்காங்கே பாதியில் விடப் பட்டதால் மழை நீர், வீடுகள் கடைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகால் வாய்க்காலில் விடப்பட்டு, சாக்கடை போல தேங்கி நின்று கொசுத்தொல்லை அதிகமாகி உள்ளது.  இதன் காரணமாக பேரா வூரணி பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்ச லால் ஒருவர் பாதிக்கப்பட்டால், வீட்டில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் பரவுகிறது.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள் கடும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.  மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வாய்க்காலை முழு மைப்படுத்தி, தேங்கிக் கிடக் கும் சாக்கடை தண்ணீரை வெளி யேற்றவும், சாலை பணிகளை விரைந்து முடித்து தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பணிகள் தாமதம் ஆனால் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே எச்சரிக்கை விடுத் துள்ளது குறிப்பிடத்தக்கது.