districts

img

தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.24-

      தரைக்கடை வியாபாரிகளை முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, தேசிய அடையாள அட்டை  வழங்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.15,000 வழங்க வேண் டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மயி லாடுதுறை, பெரம்பலூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

     தஞ்சாவூர் மாவட்ட சாலை யோர சிறு கடை விற்பனையாளர் கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்  டத்திற்கு ஆர்.மணிமாறன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால், தரைக்கடை சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.மில்லர்  பிரபு, மாவட்டப் பொருளாளர் ஏ. பாண்டியன், டி.சார்லஸ், டி.திலக வதி, சாய் சித்ரா, கே.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

     திருச்சிராப்பள்ளியில் மாநக ராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாந கர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், மாவட்டத் தலைவர் சீனி வாசன், சாலையோர வியாபாரி கள் சங்க மாவட்டச் செயலாளர்  செல்வி, கோபால், புஷ்பாகரன்,  அப்துல்லா, நத்தர் அலி,அமா னுல்லா, ஷேக் மொய்தீன், சுரேஷ்,  கோவிந்தன், ரெத்தினம் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.

    பெரம்பலூர் பழைய பேருந்து  நிலையம் முன்பு மாவட்டத் தலை வர் வி.வரதராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.ரெங்க ராஜ், துணைச் செயலாளர் எம். செல்லதுரை, சிஐடியு மாவட்டச்  செயலாளர் எஸ்.அகஸ்டின், மாவட் டத் தலைவர் அ.ரெங்கநாதன், துணைத்தலைவர் எம்.கருணாநிதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மயிலாடுதுறையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் ஏ.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஞானசேகர், வைத் தீஸ்வரன்கோயில் லதா, மயிலாடு துறை ஏழுமலை,சம்சுதீன் சிஐடியு  மாநிலச் செயலாளர் கருப்பையன்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஆர் ரவீந்திரன், கவுரவத் தலைவர் டி.துரைக்கண்ணு உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.