districts

  திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியத்தில் கொலை

முசிறி, மே 17-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி இவ ரது மனைவி ராஜேஸ்வரி (65) இவர் தனது வீட்டில் தனி யாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரியை பார்த்துப் பேசியுள்ள னர். இதையடுத்து புதனன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.  இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ள னர்.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்  துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய முசிறி காவல்துறை துணக் கண்காணிப்பாளர் யாஸ்மின், காவல்  ஆய்வாளர் முத்தையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.