தேனி, ஏப்.27-
தமிழக எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தல மாக விளங்குகிற மூணாறில் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் மலர் கண்காட்சி ,மூணாறு மேளா போன்ற நிகழ்வுகள் நடை பெறும். கோடைகாலத்தை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி சுற்றுலாத்துறை சார்பில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி மே 1-இல் தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மூணாறு பாலாற்றின் கரை அருகே உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெறும் கண் காட்சியில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பூக்கள் இடம் பெற உள்ளன.காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். தினமும் மாலையில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடை பெறும்.நுழைவுக்கட்டணம் ரூ.60, சிறு வர்களுக்கு ரூ.35 ஆகும்.
எட்டு ஏக்கர் நிலத்தில் உள்ள தாவர வியல் பூங்காவில் மேலஸ்டோமா, இம் பேப்பன்ஸ், மட்னோலியா, கிராண்டி போரா, மக்னோலியா, லில்லி ப்ளோரா உள்ளிட்ட பலவகையான ரோஜாக்கள் ,30 வகையான ஷீனியா, 31 வகையான அஷ்லியா, 7 வகையான கமேலியா மலர்கள் இடம்பெறுகின்றன.