districts

img

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அரியலூர், பிப்.16- ஜனவரி மாதத்திற்கான ஊதியம் இன்றுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும் அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவ லறிந்து வந்த நகராட்சி ஆணையர் (பொ) தமயந்தி ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார்.