அரியலூர், நவ.12 - அரியலூர் மாவட்டம் இடையாறு ஊரா ட்சிக்கு உட்பட்ட கல்லாங்குளம் கிராமத்தில் உள்ள கொட்டாதெருவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முக்கிய சாலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பகுதிக்கு, கடந்த 50 ஆண்டுகளாக மண்சாலையை மட்டுமே உள்ளது. இந்த மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து மண் சாலையிலேயே மக்கள் பயணித்து வருகின்ற னர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், மண்சாலை முழு வதும் சேறும் சகதியுமாகி வயல்போல் காட்சி அளிக்கிறது. இதில் நடந்துகூட செல்ல முடி யாத நிலையில் மக்கள் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த பல்லாங்குழி சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும். எனவே மக்கள் பயன்பெறும் வகையில் மண்சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.