districts

img

தாயுமானவர் திட்ட விளக்கப் பயிற்சி

புதுக்கோட்டை, டிச.19:-  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயலாக்கம் செய்வது குறித்து, விளக்கப் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் மு.அருணா  தலைமையில் வியாழக்கிழமை  நடை பெற்றது.  பின்னர் ஆட்சியர் தெரி விக்கையில், தாயுமானவர் திட்டத்தின்கீழ், மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக் குடும்பத் தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தை கள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் போன்ற விளிம்பு  நிலை மக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக் க்கான அடிப்படை வசதிகள,; கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன.   புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறத்தில் 59,736 குடும்பங்களுக்கும், நகர்ப்புறத்தில்  11,413 குடும்பங்களுக்கும் என மொத்தம் 71,149 குடும்பங்களில் தாயுமானவர் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு 27.12.2024 முதல் 10.01.2025-க்குள் முடித்திட தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.  இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.