districts

மீனவர்களை காக்கத் தவறியதை மறைக்கவே ஒன்றிய அரசு கச்சத்தீவு நாடகம் நடத்துகிறது

பாபநாசம் ஏப்.4 - தமிழ்நாட்டு மீனவர்களின் நலன் காக்க  ஒன்றிய பாஜக அரசு ஒரு சிறிய முயற்சி கூட எடுக்கவில்லை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 31.1.2014 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மீனவரணிச் சார்பில் கடல் தாமரைப் போராட்டம் இரா மேஸ்வரம் தீவில் உள்ள பாம்பனில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை வகித்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ், “பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறையை உரு வாக்கி, அதற்குத் தனி அமைச்சர் நியமிக்கப் படுவார். கச்சத்தீவில் தமிழக மீன வர்களின் பாரம்பரிய உரிமைகள் பாது காக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார். இராமநாதபுரத்தில் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு என இரண்டு நாடாளு மன்றத் தேர்தல்களின் போது, பாஜக மற்றும் நரேந்திர மோடியால் மேலும் பல  வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.   மண்டல் ஆணைய  பரிந்துரைகளை நிறை வேற்றி, இந்திய நாட்டில் வாழும் பாரம்பரிய மீனவ சமுதாயத்தைப் பழங் குடியினராக அங்கீகரித்தல், புயல், பெருமழை, சூறாவளி, சுனாமி  போன்ற இயற்கை பேரி டர்களின்போது, விவசாயிகளின் வங்கிக் கடன்களை ஒன்றிய-மாநில அரசுகள் தள்ளுபடி செய்வது போல், மீனவர்களின் தொழில் கடன்க ளும் தள்ளுபடி செய்யப்படும் என்பவை யும் அந்த வாக்குறுதிகளில் உண்டு.  ஆனால் பத்தாண்டு காலம் மத்தியில்  ஆட்சியிலிருந்த பாஜக இந்த வாக்குறு திகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற வில்லை. 2014 ஆம் ஆண்டு பாஜக ஒன்றியத் தில் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக மீன வர்கள் மீதான இலங்கை கடற்படை யினரின் அடக்குமுறைகள் அதிகரித்தன.  கடந்த 2014 முதல் 2024 வரையிலான 10  ஆண்டுகளில் 400-க்கும் அதிகமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.  இலங்கை நாடாளு மன்றத்தில் தமிழக மீன வர்களுக்கு சிறைத் தண்ட னையும், படகுகளை நாட்டுடைமை யாக்கும் சட்டமும், நமது நாட்டில்  ஒன்றியத்தில் பாஜக ஆட்சியில்  இருக்கும் காலத்தில்தான் இயற்றப் பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் கடந்த  ஐந்து ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடைமையாக்கி உள்ளன.  நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்கள் பழைய இரும்புக் கடைகளுக்கும் யாழ்ப்பாணத் தில் விற்பனை செய்யப்படுகின்றன. கச்சத்தீவு அருகே 2017 ஜூலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக  மீனவர்கள் மீது இலங்கை கடற்படையி னர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ (21) என்ற இளம் மீனவர் உயிரிழந்தார்.   2021 ஜனவரி மாதம் தங்கச்சிமடம் ஆரோக்கிய ஜேசு என்பவருக்குச் சொந்த மான விசைப்படகில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா, மண்டபத்தில் உள்ள  இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமைச்  சேர்ந்த சாம்சன் டார்வின், வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்வதற்காக, தங்களது கடற் படை ரோந்து படகில் துரத்தி மீன வர்களின் படகில் கடுமையாக மோதினர்.  இதில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் உயிரிழந்துள்ளனர். பாஜக தனது தேர்தல் பரப்புரை களின் போது மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி முற்றிலும் மாறான நிலைப்பாட்டை மேற்கொண்டதால்தான், கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை  கடற்படையினரால் பல்வேறு இன்னல் களுக்குத் தமிழக மீனவர்கள் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளைக் காக்க முற்றிலும் தவறிவிட்ட மோடி அரசு, தனது தோல்வியை மறைக்கப் போர்த்தும் போர்வையாகவே கச்சத்தீவு குறித்த பிரத மரின் சமீபத்திய உரையைப் பார்க்க வேண்டும். குஜராத் மீனவர்களின் நல னைக் காக்க மோடி அரசு எடுத்த முயற்சி களில் ஒரு சிறிய அளவுகூட தமிழ்நாட்டு  மீனவர்களின் நலன் காக்க எடுக்க வில்லை என்பதே உண்மை.  இந்த உண்மைகளையெல்லாம் நன்கு அறிந்திருக்கும் தமிழ்நாட்டு மீனவர்  சமுதாயம், நடைபெறவுள்ள நாடாளு மன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.